உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிலமோசடி: புரசை நபர் சிக்கினார்

நிலமோசடி: புரசை நபர் சிக்கினார்

ஆவடி,கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு, 40. இவரது தந்தை மணிக்கு, மணலிபுதுநகர், வீச்சூர் கிராமத்தில், 2,400 சதுர அடி இடம் உள்ளது. கடந்த 2022ல் கொரோனாவால் மணி உயிரிழந்தார். அந்த இடத்தை விற்க முயன்றபோது, மணியின் புகைப்படம் மற்றும் கையெழுத்துக்கு பதிலாக, வேறு ஒருவருடைய ஆவணங்கள் வைத்து ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்த ஆவடி போலீஸ் கமிஷனரக போலீசார், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 51, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். நிலத்தின் மதிப்பு, 25 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை