உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஹிந்திரா மெமோரியல் அணி மாநில கூடைப்பந்தில் சாம்பியன்

மஹிந்திரா மெமோரியல் அணி மாநில கூடைப்பந்தில் சாம்பியன்

சென்னை, இந்தியன் வங்கி மற்றும் மயிலாப்பூர் ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19வது ஆண்டிற்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில், ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட, ஆடவரில் 72 அணிகள், மகளிரில் 32 அணிகள் என, மொத்தம் 104 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் மாலை நடந்த மகளிருக்கான போட்டியில், ஹிந்துஸ்தான் பல்கலை அணி 55 - 50 என்ற புள்ளிக்கணக்கில், அரைஸ் பி.சி., அணியை தோற்கடித்தது.ஆடவர் பிரிவில், மஹிந்திரா மெமோரியல் அணி, 72 - 22 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்ரீதர் அகாடமியையும், சக்சஸ் அகாடமி, 45 - 22 என்ற புள்ளிக்கணக்கில் குளோபல் அகாடமி அணியையும் வீழ்த்தின. ரெயின்போ அகாடமி, 65 - 61 என்ற புள்ளிக்கணக்கில் பெய்த் வாரியஸ் அகாடமியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ