உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு

மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு

சென்னை: காற்று மாசுபடுதல், சுகாதாரம் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்த, விநாயகா மிஷன் பல்கலையில், 'ஒரு காரணத்திற்காக ஓடு' என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரியில் துவங்கி, பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நிறைவடைந்தது. 500 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். பல்கலையின் மாணவர்கள் ஆனந்த்பாபு, நவீன் குமார், கிருஷ்ணகுமார்; மாணவியரில் மலைச்செல்வி, கீதா கல்யாணி, காவியா ஆகியோர் முறையே முதல் மூன்று இடத்தை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை