உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2,236 சுகாதார நிலையங்களில் மருந்து இருப்பு

2,236 சுகாதார நிலையங்களில் மருந்து இருப்பு

நாய்க்கடி மருந்து இருப்பில் தமிழகம் முதலிடம் நாய்க்கடிகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து, அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இந்த பிரச்னை குறித்து, முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். நாய்க்கடி, பாம்பு கடிக்கான மருந்து, வட்டார, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை களில் மட்டுமே இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என, 2,236 சுகாதார நிலையங்களில், நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்கான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாய், பாம்பு கடிக்கான மருந்து இருப்பில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. - மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !