20க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்
சென்னை: சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சியில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சுய விளம்பரதாரர்கள் விதிமீறி ராட்சத பேனர்கள் வைத்திருந்தனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று காலை முதல் மாலை வரை, திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலை, ஆவடி, பட்டாபிராம் பிரதான சாலைகளில் விதிமீறி வைக்கப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட பேனர்களை அதிரடியாக அகற்றினர்.