உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாகர்கோவில் வந்தே பாரத் கூடுதல் பெட்டி இணைப்பு

நாகர்கோவில் வந்தே பாரத் கூடுதல் பெட்டி இணைப்பு

சென்னை சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில், வரும் 8ம் தேதி முதல் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.எழும்பூர் -- நாகர்கோவில் இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை, கடந்தாண்டு ஆக., 31ம் தேதி துவக்கப்பட்டது. தற்போது, 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பயணியர் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, பயணியர் வசதியை கருத்தில் வைத்து, எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் இரு மார்க்கத்திலும் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைத்து, 20 பெட்டிகளாக, வரும் 8ம் தேதி முதல் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை