பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் 4ம் தேதி நரசிம்ம பிரம்மோத்சவம்
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், வரும் 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளியசிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a3mhhar5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0https://x.com/dinamalarweb/status/1940258799933432320