உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 30 மாநில போலீசார் பங்கேற்கும் தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டி

30 மாநில போலீசார் பங்கேற்கும் தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டி

செங்கல்பட்டு, தேசிய அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி, நாளை செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் துவங்குகிறது. இதில், 30 மாநிலங்களைச் சேர்ந்த 634 போலீஸ்காரர்கள் பங்கேற்கின்றனர்.தேசிய அளவில் போலீசாருக்கு இடையே, கடந்த 24 ஆண்டுகளாக, துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வருகிறது. இருபாலருக்குமான இப்போட்டியில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பங்கேற்று, தங்கள் திறமையை நிரூபித்து, பதக்கங்கள் பெறுகின்றனர்.நடப்பாண்டு தமிழக காவல் துறை இந்த போட்டியை நடத்துகிறது. அதன்படி, அகில இந்திய காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், குமுளி ஊராட்சி, ஒத்தியம்பாக்கத்தில் நாளை துவங்குகிறது. வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாளை துவங்கும் துப்பாக்கி சுடும் போட்டியில், 30 மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் பங்கேற்கின்றனர். இதில், ஆண்களில் 550 வீரர்களும், பெண்களில் 84 வீராங்கனையரும் பங்கேற்கின்றனர். பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்காக, உணவு உபசரிப்புடன், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியை காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை.இறுதி நாள் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை