உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் புதிய வசதி

நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் புதிய வசதி

சென்னை, நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையை மாற்றி, பொதுமக்கள் வசதிக்காக, நில அளவை செய்ய, tamilnilam.tn.gov.in.citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இச்சேவையை, மக்கள் எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்கலாம். மனுதாரருக்கு, குறுஞ்செய்தி அல்லது மொபைலில் தெரிவிக்கப்படும். பின், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவற்றை மனுதாரர், https://eservices.tn.gov.in/ என்ற இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை