உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்டோபஸ் மரைன் அணி கால்பந்து லீக்கில் வெற்றி

ஆக்டோபஸ் மரைன் அணி கால்பந்து லீக்கில் வெற்றி

சென்னை:சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆண்களுக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, அயனாவரம் ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஆக்டோபஸ் மரைன் அணி, டி.பி.ஒய்.சி., கீழ்பாக்கம் அணி மோதியது.ஆக்டோபஸ் மரைன் அணி வீரர் மனோஜ், ஐந்தாவது நிமிடம்; ஜெய்கணேஷ் 22வது நிமிடம்; ரிக்கி பாரத் 28வது நிமிடம்; சிவகுமார் 62வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.டி.பி.ஒய்.சி., கீழ்பாக்கம் அணிக்கு, அதன் வீரர் கிரிஷ் 83வது நிமிடத்தில் அடித்த ஒரு கோல் மட்டுமே கிடைத்தது. ஆக்டோபஸ் மரைன் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு முதல் டிவிஷன் போட்டியில், பேசின்பிரிட்ஜ், தாவூத் அணிகள் மோதின. 1 - 1 என்ற கோல் கணக்கில், ஆட்டம் டிராவில் முடிந்தது.பேசின்பிரிட்ஜ் அணி வீரர் ஜீவிஸ் 20வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தாவூத் அணி சார்பில், வீரர் சந்தோஷ் 52வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை