உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரக்கு ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

சரக்கு ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

கொருக்குப்பேட்டை:கொருக்குப்பேட்டை தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு நேற்று மாலை தகவல் வந்தது.கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பெரம்பூரில் இருந்து கொருக்குப்பேட்டை நோக்கி வந்த கூட்ஸ் ரயில் மோதி தலை துண்டாகி உயிரிழந்தது தெரியவந்தது. இறந்தவர் குறித்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !