ஓட்டுநர் இல்லாத 2வது மெட்ரோ ரயில் தயார்
சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் மொத்தம் 138 ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், பூந்தமல்லி பணிமனை மற்றும் கோயம்பேடில் உள்ள பணிமனையில் குறுகிய துாரம் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக, வேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும்.ஓட்டுனர் இல்லாத இரண்டாவது மெட்ரோ ரயில் இன்று அல்லது நாளைக்கு, ஸ்ரீசிட்டியில் இருந்து சென்னைக்கு வர உள்ளது. இந்த ரயிலை, பூந்தமல்லி பைபாஸ் - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான மேம்பால பாதையில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.