மேலும் செய்திகள்
சீரமைத்த சாலையில் மீண்டும் 5 அடி ஆழத்தில் பள்ளம்
25-Oct-2024
வளசரவாக்கம்,வளசரவாக்கம் மண்டலம் 152வது வார்டில், கடம்பன் தெரு உள்ளது. இத்தெருவில் மாநகராட்சி சிறுவர் பூங்கா, கழிவுநீர் உந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இச்சாலையில், சில மாதங்களுக்கு முன், குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அப்பணிகள் முடிந்த பின், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆக., மற்றும் அக்., மாதம், இரு இடங்களில் இச்சாலை உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளத்தில் மண் கொட்டி சீர் செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு, கடம்பன் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலைய வாசலில், 10 அடி ஆழம், 3 அடி அகலம் அளவிற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பள்ளத்தில் மண் கொட்டி சாலை சீர் செய்யப்பட்டது.ஆனால், இச்சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால், சாலையின் கீழ் செல்லும் குழாயை முறையாக ஆய்வு செய்து சீர் செய்ய வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Oct-2024