மேலும் செய்திகள்
மே 1ல் கிராமசபை கூட்டம்
26-Apr-2025
காஞ்சிபுரம்உழைப்பாளர் தினமான நேற்று, மே தின சிறப்பு கிராம சபை கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது.இந்த கூட்டத்திற்கு, ஏகனாபுரம் ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். கிராம சபை கூட்டத்தின் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், பரந்துார் விமான நிலையத்தால், பறிபோகும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். ஏகனாபுரம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, 13வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
26-Apr-2025