உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான்கு வகுப்பறைகள் கட்ட ரூ.1.42 கோடி ஒதுக்கீடு

நான்கு வகுப்பறைகள் கட்ட ரூ.1.42 கோடி ஒதுக்கீடு

சோழிங்கநல்லுார்:கே.கே.சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 1.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, கே.கே., சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஒரு ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு, 632 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 17 வகுப்பறைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாணவ - மாணவியர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதால், கூடுதல் வகுப்பறைகள் தேவைப்பட்டன. இதையடுத்து, நான்கு வகுப்பறைகள் கட்ட, 1.42 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியது. இதில், வகுப்பறைகள், கழிப்பறை கட்டப்பட உள்ளன. இதற்கான பணி, விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ