உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்வாரிய ஆபீசில் ரூ.18,000 பறிமுதல்

மின்வாரிய ஆபீசில் ரூ.18,000 பறிமுதல்

வியாசர்பாடி: சர்மா நகர் மின்வாரிய அலுவலகத்தில், கணக்கில் வராத, 18,000 ரூபாய், லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர். வியாசர்பாடி, சர்மா நகர் மின்வாரிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் செல்வி தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது, மின்வாரிய அலுவலகத்தில், வணக உதவியாளர் அறையில் இருந்து, கணக்கில் வராத, 18,000 ரூபாய் சிக்கியது. அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, துறை ரீதியாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ