உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீ விபத்து ஏற்பட்ட ஏ.டி.எம்., மில் ரூ. 8.50 லட்சம் தப்பியது

தீ விபத்து ஏற்பட்ட ஏ.டி.எம்., மில் ரூ. 8.50 லட்சம் தப்பியது

குரோம்பேட்டை, சிட்லபாக்கம், அண்ணா தெருவில், எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இந்த மையத்தில், மின் கோளாறு காரணமாக 19ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் மையம் முழுதும் எரிந்தது. ஆனால் இயந்திரத்தில் இருந்த ரூபாய் தீ விபத்தில் எரிந்ததா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், நேற்று இயந்திரம் உடைக்கப்பட்டது. அப்போது, 500 ரூபாய், 100 ரூபாய் என, 8.50 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த பெட்டி சேதாரம் இல்லாமல் தப்பியது தெரிந்தது. இதனால் வங்கி அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை