உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் உந்து நிலையம் 12 மணி நேரம் நிறுத்தம்

கழிவுநீர் உந்து நிலையம் 12 மணி நேரம் நிறுத்தம்

சென்னை, குழாய் பழுது பார்க்கும் பணி நடப்பதால், ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள், இன்று இரவு, 10:00 மணி முதல், 12 மணி நேரத்திற்கு செயல்படாது.ராயபுரம் மண்டலம், வேனல்ஸ் சாலையில் கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்ட பழுது சரிசெய்யும் பணி நடக்க உள்ளது. இதனால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 10:00 மணி வரை, ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. இந்த நேரத்தில், இயந்திர நுழைவாயில் வழியாக கழிவுநீர் வெளியேறினால், லாரிகள் கொண்டு வெளியேற்றப்படும். இதற்கு, ராயபுரம் மண்டல அலுவலகத்தை, 81449 30905; தேனாம்பேட்டை மண்டலத்தை, 81449 30909 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ