உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

சென்னை, பயணியர் தேவை கருதி, எழும்பூர் - விசாகப்பட்டினம், சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, வரும் மார்ச் வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து, புதன்கிழமைகளில் காலை 11:35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 8:30 மணிக்கு ஈரோடு வந்தடையும்.இந்த ரயில் இரு மார்க்கத்திலும், வரும் டிச., 11 முதல் மார்ச் 7வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில், இரு மார்க்கத்திலும் டிச., 7 முதல் மார்ச் 2 வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை