தாம்பரம் - திருச்சி, நெல்லைக்கு ரம்ஜானுக்காக சிறப்பு ரயில்கள்
சென்னை, ரம்ஜான் பண்டிகையொட்டி, தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: ★ தாம்பரத்தில் இருந்து, வரும் 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து, வரும் 31ல் இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:55 மணிக்கு தாம்பரம் வரும். செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக செல்லும்★ திருச்சியில் இருந்து, வரும் 29, 31ம் தேதிகளில் அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, அதேநாளில் இரவு 10:40 மணிக்கு திருச்சி செல்லும். செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. * கூடுதலாக 4 பெட்டி இணைப்புதாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: * மதுரை - தாம்பரம் இடையே வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில், ஏப்., 26ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று 'ஏசி' பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.* தாம்பரம் - மதுரை இடையே வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில் இன்று முதல் ஏப்., 27ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று ஏசி பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.