உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் ஸ்ரீஹரி சாம்பியன்

சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் ஸ்ரீஹரி சாம்பியன்

சென்னை:அகில இந்திய சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகம் ஆதரவுடன், சக்தி குரூப் ஆப் கம்பெனி சார்பில், மகாலிங்கம் கோப்பைக்கான, 14வது, சர்வதேச செஸ் போட்டி, சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் விடுதி அரங்கில், டிச., 31ல் துவங்கியது.இப்போட்டியில், சர்வதேச வீரர்கள், இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் தமிழகத்தின் முன்னணி வீரர்கள் என, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.மொத்தம் 10 சுற்றுகள் என, சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. நேற்று, இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன.இதில், தமிழக வீரர் ஸ்ரீஹரி 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று, 'சாம்பியன்' பட்டம் வென்றார். இவருக்கு ரொக்கப் பரிசாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.தவிர, இரண்டாம் இடத்தை வியட்நாம் வீரர் நுயென் டக் ஹோவா பிடித்தார். இவருக்கு 3 லட்சம் ரூபாய்பரிசளிக்கப்பட்டது.மூன்றாம் இடத்தை தமிழக வீரர் ஆகாஷ் பிடித்தார். இவருக்கு 1.75 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.தவிர, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 60க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, மொத்தம் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை