உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோவிலம்பாக்கத்தில் சுடுகாடு மாயம்

 கோவிலம்பாக்கத்தில் சுடுகாடு மாயம்

கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கத்தில், மயானத்திற்கு ஒதுக்கிய 26 சென்ட் பரப்பளவு கொண்ட இடம், தனி நபர்களின் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ளதாக, பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சோழிங்கநல்லுார் வட்டம், சுண்ணாம்புகொளத்துார் கிராமத்தில், எஸ்.கொளத்துார் பிரதான சாலையில் உள்ள சர்வே எண்: 389/1ல் மயானம் என, 1951ம் ஆண்டு கிராம பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, 1986ம் ஆண்டு, யு.டி.ஆரில் இருந்து, கணினிமயமாக்கப்பட்ட பின்பும், குறிப்பிட்ட சர்வே எண் மயானம் என்றே குறிப்பிடுகிறது. இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டில் இருந்து, சிலரின் பெயரில் பட்டா மாறுதலாகி உள்ளதோடு, அங்கு அவர்கள் வணிக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். கலெக்டர் தலையிட்டு, ஆக்கரமிப்பில் உள்ள மயானத்திற்கான இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி