எம்.டி.சி.யில் தாழ்தள பஸ் எண்ணிக்கை 408 ஆக உயர்வு
சென்னை, டமாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மீண்டும் தாழ்தள பஸ்கள் இயக்க, தமிழக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர போக்குவரத்து கழகத்தில், 611 தாழ்தள பஸ்கள் ஒதுக்கப்பட்டன. முதற்கட்டமாக, 58 பஸ்கள் கடந்த ஆகஸ்டில், சென்னையில் துவக்கி வைக்கப்பட்டன. பஸ்களில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ., குறைத்து, பயணியர் ஏறிய பின், பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி, என்று பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த வகை பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்தில் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலவரப்படி, 408 தாழ்தள பஸ்கள், 78 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.