உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

பெரம்பூர், பெரம்பூர், பாரதி முதல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி, 18; கல்லுாரி மாணவி. இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட, தாய், தங்கையுடன் வசித்து வந்தார்.ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த வாலிபரும், இவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களாக, அவரிடம் பேசுவதை கிருஷ்ணகுமாரி நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், ஒன்றாக எடுத்த புகைப்படங்களை குடும்பத்தாரிடம் காட்டி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான கிருஷ்ணகுமாரி, கடந்த 2ம் தேதி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார் இதில் படுகாயமடைந்தவர், ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என, கிருஷ்ணகுமாரி குடும்பத்தினர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை