மேலும் செய்திகள்
இன்று இனிதாக (31.10.2025)
31-Oct-2025
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் சிங்காரவேலர் விடையாற்றி, 4ம் நாள் உற்சவம் - -மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர். முருகப்பெருமான் கோவில் மகா கந்தசஷ்டி, 11ம் நாள் விடையாற்றி முன்னிட்டு அருணகிரிநாதர் புறப்பாடு- - இரவு 7:30 மணி. இடம்: வடபழனி. அஷ்டலட்சுமி கோவில் மகா சம்புரோட்சணத்தை அடுத்து மண்டல பூஜை -- காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கல்லுாரோடு, கவுரிவாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில் அபிஷேகம் -- காலை 6:00. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. சீனிவாச பெருமாள் கோவில் புலவர் அரங்கராசனின் கம்பராமாயண சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. பொது புத்தகம் வாசித்தல் அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர். இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்த படி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம். கண்காட்சி காற்றாலை மின்சாரம் குறித்த 7வது சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். சொற்பொழிவு மதுரத்வனி சார்பில் மருத்துவ கல்வியாளரான சுதா சேஷய்யனின் மஹாபாரதம் சொற்பொழிவு - மாலை 6:30 மணி, இடம்: ஆர்.கே., கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.
31-Oct-2025