உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டன் கணக்கில் குப்பையில் வீசப்பட்ட அழுகிய வெங்காயம்

டன் கணக்கில் குப்பையில் வீசப்பட்ட அழுகிய வெங்காயம்

கோயம்பேடு கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை 1,200 டன் வெங்காயம் தேவையுள்ளது. இந்த நிலையில் 700 - - 800 டன் வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.இதில், கர்நாடக வெங்காயம் நான்கு நாட்களில் அழுகி விடும் தன்மை உடையது. மேலும், சமீபத்தில் அங்கு கனமழை கொட்டி தீர்த்ததால், மூட்டையிலே கிலோ கணக்கில் வெங்காயம் அழுகி விடுகிறது.இதனால், டன் கணக்கில் வெங்காயம் கோயம்பேடு சந்தையில் குப்பையில் கொட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ