நண்பனை தாக்கிய இருவர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 23. கடந்த 3ம் தேதி இவரை, மது போதையில் ஏற்பட்ட தகராறில், அவரது நண்பர்கள் அருண்குமார், கலைநிதி ஆகியோர் தாக்கியது தெரிந்தது. தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அருண்குமார், 35 என்பவர் கைதான நிலையில், கலைநிதி, 27 என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.