உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

புளியந்தோப்பு:ஜெ.ஜெ நகர் பிரதான சாலையில், ஆடு தொட்டி பின்புறம், கஞ்சா வியாபாரியான சரத் என்கிற கார்டன் சரத், 28, என்பவரை, கடந்த 9ம் தேதி, போக்கிரிகள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தனிப்படை போலீசார் பிடித்து, புளியந்தோப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், புழல், ராசி நகரைச் சேர்ந்த, சாந்தகுமார், 24, மற்றும் புளியந்தோப்பு, கே.பி., பார்க் பகுதியைச் சேர்ந்த சரவணன், 20, ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார், நேற்று இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை