உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

குடிநீர் வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

சென்னை, அபராதம் இல்லாமல் வரி செலுத்த வசதியாக, வரும் ஞாயிற்றுக் கிழமையும் வரி வசூல் மையங்கள் திறந்திருக்கும் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில், 2025 - -26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான வரி மற்றும் கட்டணத்தை, வரும் 30ம் தேதிக்குள், அபராதம் இல்லாமல் செலுத்தலாம். இதற்கு வசதியாக, விடுமுறை நாளான 28ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை, வரி வசூல் மையங்கள் இயங்கும் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை