உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது குழந்தையின் வளையல் திருடிய பெண் கைது

பொது குழந்தையின் வளையல் திருடிய பெண் கைது

சென்னை,புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மேலியா அருள்ராஜ், 34. கடந்த 9ம் தேதி காலை, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன், எழும்பூர் எல்.ஜி., சாலையில் உள்ள சர்ச்சிற்கு சென்றார்.மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, குழந்தையின் கையில் அணிந்து இருந்த, 4 கிராம் எடையிலான வளையல் திருட்டு போனது தெரியவந்தது.எழும்பூர் போலீசாரின் விசாரணையில், புதுப்பேட்டையைச் சேர்ந்த சந்தியா, 19, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், வளையலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ