மேலும் செய்திகள்
ஹெராயின் விற்ற தம்பதி சிக்கினர்
26-Oct-2024
சூளை, சூளை, சட்டன்னன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரா.செல்வம், 52. வழக்கறிஞர். இவர், கடந்த 30ம் தேதி குருசாமி நகரில் நண்பர் ராஜேஷ்பாபு என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த புளியந்தோப்பைச் சேர்ந்த ஆனந்த், 47 என்பவர், செல்வம் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் காவல்நிலையம்அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, ஆனந்த் மதுபோதையில் இருந்ததால் அவரை மறுநாள் விசாரணைக்கு வரும்படி அனுப்பி வைத்தனர். மறுநாள் மீண்டும், செல்வம் மற்றும் அவரது நண்பரான ராஜேஷ்பாபு ஆகியோரை ஆனந்த் மற்றும் அவரது உறவினர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.இதுகுறித்த புகாரின்படி, ஆனந்த்,47, அவரது தாய், மனைவி, மூன்று சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான விக்னேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
26-Oct-2024