உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளிர் கால்பந்து: தமிழகம் தோல்வி

மகளிர் கால்பந்து: தமிழகம் தோல்வி

சென்னை, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவில் '30வது மகளிர் சீனியர் ராஜமாதா ஜிஜாபாய் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்' போட்டி, சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் நகரில் நடந்து வருகிறது. இதற்கான அரையிறுதி போட்டியில், தமிழக அணி 0 - 4 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியிடம் வீழ்ந்தது. மற்றொரு அரையிறுதியில், மேற்கு வங்க அணி 4 - 0 என்ற கோல் கணக்கில், உத்தர பிரதேசம் அணியை தோற்கடித்து, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை