| ADDED : மார் 17, 2024 12:51 AM
சென்னை:ஆதம்பாக்கம், கோரிமஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் வாசு, 43; கட்டுமான தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கிண்டி - மவுன்ட் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.அப்போது, சென்னையில் இருந்து தென்மாவட்டம் நோக்கிச் சென்ற விரைவு ரயில், அவர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட வாசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.