உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உலக கோப்பை கிக் பாக்சிங்  தமிழக வீரருக்கு வெண்கலம்

உலக கோப்பை கிக் பாக்சிங்  தமிழக வீரருக்கு வெண்கலம்

சென்னை:தாய்லாந்து 'கிக் பாக்சிங்' சங்கம் சார்பில், முதலாவது 'கிக் பாக்சிங்' உலகக் கோப்பை போட்டி, கடந்த 7ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இப்போட்டியில், இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, கம்போடியா, பின்லாந்து, மலேசியா, பிரான்ஸ், நார்வே, உக்ரைன் உட்பட, 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.இரு பாலரிலும், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.இதில், இந்தியாவின் சார்பில், 22 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன், சீனியர் பிரிவில், 'பாய்ன்ட் பைட்டிங்' மற்றும் 'லைட் காண்டாக்ட்' ஆகிய போட்டிகளில் பங்கேற்று, ஐந்தாம் இடம் பிடித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீனிவாசன், ஜூனியர் பிரிவில் 'லோ கிக்' போட்டியில் பங்கேற்று, மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றார்.அவருக்கு, தமிழ்நாடு மாநில அமெச்சூர் 'கிக் பாக்சிங்' சங்கம் சார்பில்ன் பாராட்டுகள் குவிகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை