உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை:சென்னை ஊர்க்காவல் படையில் சேர, விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காவல் துறை செய்தி குறிப்பு:சென்னை ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர், 18 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்களாக இருக்கலாம்.குற்றப் பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாகவும், சென்னையில் வசிப்பவர்களாகவும், குடும்ப அட்டை வைத்திருப்போராகவும் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படுவோருக்கு, 45 நாட்கள், தினமும் 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பின், அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிய அனுப்பப்படுவர்.சீருடை, தொப்பி, ஷூ வழங்கப்படும். பகல், இரவு ரோந்து பணி, போக்குவரத்து சீர்செய்ய, 560 ரூபாய் வழங்கப்படும்.சிறப்பாக மெச்சத் தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு, தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும்தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதே அலுவலகத்திற்கு அனுப்பலாம்.விபரங்களுக்கு, 9498135190, 9566776222 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி