உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாரம் தாக்கி 3 மாணவர் பலி

மின்சாரம் தாக்கி 3 மாணவர் பலி

கோவை : கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் துறை ரீதியான விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அக்கல்லூரி மாணவர்கள் செய்து வந்தனர். சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக கல்லூரி பிளக்ஸ் போர்டு, பேனர்களை நுழைவாயில் முன் கட்டும் பணியில் மாணவர்கள் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஈடுபட்டிருந்தனர். பிளக்ஸ்களை தூக்கி கட்டும்போது, மேலே சென்றுகொண்டிருந்த மின் கம்பியில் பிளக்ஸ் பட்டு மின்சாரம் தாக்கியதில் மூவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ