உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த வகை நாய் குரைக்காது!

இந்த வகை நாய் குரைக்காது!

நாய்கள் கனவு காணும். நாய்களின் மூக்குப்பகுதி, மனித விரல் ரேகை போன்று தனித்துவமானது. நாய்கள் 250 வகையான இடங்கள் / மனிதர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறன் உடையது. அதிவேகமாக ஓடக்கூடிய நாய் இனம் - 'சாளுக்கி' குரைக்காத நாயினம் - பேசின்ஜி. சௌ சௌ மற்றும் செர்மிஸ் நாய்களின் நாக்கு கருப்பு நிறத்தில் இருக்கும். நாய்களின் கர்ப்ப காலம், 60 நாட்கள். கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலிலிருந்து மூன்று நாய்கள் மீட்கப்பட்டுள்ளன. நாய்களால் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தை காணமுடியும். மனிதன் சுவை நுகர்வு திறனில், ஆறில் ஒரு பங்கு மட்டுமே நாயால் அறிய முடியும். இரண்டு வயது குழந்தைக்கு உரிய மூளை வளர்ச்சியை நாய்கள் கொண்டு இருக்கும். பெரும்பாலும் நாய்க்குட்டிகள் பிறக்கும் போது பார்க்கும் மற்றும் கேட்கும் திறன் இருக்காது. நாய்களில் பெரும்பாலான வியர்வை சுரப்பிகள் கால் அடி பாதத்தில் உள்ளது. நாய்களுக்கும் பொறாமை குணம் உண்டு.தகவல்: முனைவர். சு. கிருஷ்ணகுமார், இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ