உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கள் வரத்து அதிகரிப்பு விலையில் மாற்றமில்லை

காய்கள் வரத்து அதிகரிப்பு விலையில் மாற்றமில்லை

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து அதிகரித்தும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், விவசாயிகள் பலர் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது மார்க்கெட்டில், காய்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டு வரத்து அதிகரித்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ) - 290, தேங்காய் - 18 (ஒன்று), கத்தரிக்காய் (கிலோ) - 55, முருங்கைக்காய் - 45, வெண்டைக்காய் - 20, முள்ளங்கி - 28, வெள்ளரிக்காய் - 22, பூசணிக்காய் - 30, அரசாணிக்காய் - 18, பாகற்காய் - 40, புடலை - 25, சுரைக்காய் - 25, பீர்க்கன் - 18, பீட்ரூட் 20, அவரைக்காய் - 35, பச்சை மிளகாய் - 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த வாரத்தை விட தற்போது, தக்காளி 15 கிலோ பெட்டி - 60 ரூபாய் விலை குறைந்துள்ளது. கத்தரிக்காய் - 15, வெண்டைக்காய் - 10, முள்ளங்கி - 45, பாகற்காய் - 20, புடலை - 15, சுரைக்காய் - 5, பீக்கன்காய் - 7, பீட்ரூட் - 13, அவரைக்காய் - 30, பச்சைமிளகாய் - 50 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. வெள்ளரிக்காய் மட்டும், 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை