உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 32. இவரது தம்பி சேகர், 28. இருவரும் பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு உள்ளது. இதனிடையே சரவணன் சேகரிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.இதனால் கோபம் கொண்ட சேகர், சரவணன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு சென்று சரவணனை கத்தியால் குத்தினார். கோவை அரசு மருத்துவமனையில் சரவணன் சிகிச்சை பெறுகிறார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்தனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை