உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பேரழிவு: கரைகளை பலவீனப்படுத்தும் கட்டடங்கள்

காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பேரழிவு: கரைகளை பலவீனப்படுத்தும் கட்டடங்கள்

தஞ்சாவூர் : காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய பகுதிகளில் முக்கிய நீர் ஆதாரங்களாக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆறுகள் உள்ளன. அத்துடன், 36 கிளை ஆறுகள் பாய்கின்றன.இந்நிலையில், அரசு விதிகளுக்கு புறம்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை, வருவாய் துறை, சுற்றுச்சூழல், வன பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முறைகேடுகளாக ஆற்றின் கரைகளில் செங்கல் சூளைகள், வீடுகள், வணிக நிறுவனங்கள், கான்கிரீட் சிமென்ட் கலவை தயாரிப்பு கூடங்கள் அமைக்க அனுமதி அளித்துள்ளனர்.இதனால், கரைகள் மிகவும் பலவீனம் அடைந்து வருவதாகவும், கரைகளை பலர் உடைத்து பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மேலும், எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவிற்கு, பேரழிவுகளை காவிரி சமவெளி மாவட்டங்கள் சந்திக்கும். எனவே, தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை குழுவின் மூத்த உறுப்பினர் திருப்புகழ்,நீர்வள துறையின் முதன்மைச் செயலர் சந்திப் சக்சேனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கல்லணை தலைப்பு முதல், கடல் வரை ஆய்வு நடத்த வேண்டும் என விவசாயிகள் மனு அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:

கல்லணையில் இருந்து பூம்புகார், வேதாரண்யம், பழையார் கடற்கரை வரை காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆற்றின் இருபுற கரைகளில் ஆங்கிலேயர் காலத்தில் 40 அடி சாலைகள் இருந்துள்ளன. அவை இப்போது இல்லை.தற்போது நுாற்றுக்கணக்கான செங்கல் சூளைகள், கட்டடங்கள், விவசாய நிலங்கள், சிமென்ட் கலவை, தார் உற்பத்தி நிலையங்களால் ஆற்றின் கரைகள் பலவீனமாக மாறியுள்ளன.பலவீனத்தை இனியும் அரசு அலட்சியப்படுத்தி கண்டு கொள்ளாமல் இருந்தால், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டது போல, பெருவெள்ள பேராபத்து காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு ஏற்படும். பேரழிவுகளுக்கு எவ்விதத்திலும் ஈடு கட்ட முடியாத பல நுாறு கிராமங்கள் பாதிப்புகளை சந்திக்கும்.எனவே, மூத்த ஓய்வு பெற்ற நீர்வளத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் ஆலோசனைகளை பெற்றும்,வருவாய் துறையின் பழைய நில அளவை பதிவேடுகள் அடிப்படையில் முழுதுமாக நில அளவை கணக்கீடுகள் செய்து, தனியார் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக அகற்ற வேண்டும். ஆற்றின் கரைகளை நேரில் ஆய்வு செய்து கரைகளை மீட்டெடுத்து பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

aaruthirumalai
ஜூலை 29, 2024 14:08

சந்தோசம் அப்புறம்?


Mettai* Tamil
ஜூலை 29, 2024 10:58

வோட்டுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி கொடுத்தால் போதும், எவ்வளவு பெரிய பேரழிவு வந்தாலும் அதை தாங்க கூடிய மன வலிமை தமிழக மக்களுக்கு தன்னால வந்து விடும். அதனால் கவலைப்பட வேண்டாம் ஆபரேஷன் சக்ஸஸ் தான்


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:16

சாயக் கழிவுநீர் காவிரியில் கலக்கப் படுவதால் ஏற்படும் இழப்பு இதனை விட அதிகம். உண்மையில் தானியம் என்ற பெயரில் மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை உண்கிறோமா?


Svs Yaadum oore
ஜூலை 29, 2024 09:40

உத்தர பிரதேசத்தில் 1971-இல் அரிசி உற்பத்தி 37 லட்சம் டன்... 2023-இல் அது 125 லட்சம் டன்னாக அதிகரித்தது. தமிழகம் 1971-இல் 50.07 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்த நிலையில், தமிழக அரிசி உற்பத்தி 2023-இல் 80 லட்சம் டன்னாக அதிகரித்தது. அரிசி உற்பத்தியில் உத்தர பிரதேசம் முன் சென்று விட்டது. ....அடுத்த மாநிலத்திடம் தண்ணீருக்கும் சோற்றுக்கும் பிச்சையெடுக்கும் நிலைமை ....இந்த நிலைமையில் தமிழ் நாட்டை ஐரோப்பா நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டுமாம் ...


Svs Yaadum oore
ஜூலை 29, 2024 09:29

நுாற்றுக்கணக்கான செங்கல் சூளைகள், கட்டடங்கள், விவசாய நிலங்கள், சிமென்ட் கலவை, தார் உற்பத்தி நிலையங்களால் ஆற்றின் கரைகள் பலவீனமாக மாறியுள்ளனவாம்..பேரழிவுகளுக்கு எவ்விதத்திலும் ஈடு கட்ட முடியாத பல நுாறு கிராமங்கள் பாதிப்புகளை சந்திக்குமாம் ...இதை செய்தது விடியல் திராவிடனுங்க ...அவர்களிடமே காசு பணம் டாஸ்மாக் பிரியாணி வாங்கி அடுத்த தேர்தலில் அவர்களுக்கே வோட்டு போடுங்க ...


Svs Yaadum oore
ஜூலை 29, 2024 09:25

சட்டிஸ்கர் மாநிலம் அரிசி உற்பத்தி 60 லட்சம் டன் அங்குள்ள மக்கள் தொகை 2.5 கோடி. தமிழ் நாடு மாநிலம் அரிசி உற்பத்தி 80 லட்சம் டன் மக்கள் தொகை 8 கோடி....தமிழ் நாடு மிக முன்னேறிய ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டிய மாநிலமாம் ....அரிசிக்கும் தண்ணீருக்கும் அடுத்த மாநிலத்திடம் இங்குள்ளவன் பிச்சை எடுக்கும் நிலைமை ...


Svs Yaadum oore
ஜூலை 29, 2024 09:23

முன்னேறிய மாநிலமான தமிழ் நாடு அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலிருந்து பின்தங்கி ஐந்தாம் இடம் செல்ல காரணம் என்ன? தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் இதற்கு பதில் சொல்லுமா? விடியல் திராவிடங்களிடம் இதற்கு பதில் உண்டா? ஊரெங்கும் ஆற்று மணல் கொள்ளை. மலையை பெயர்த்து கேரளாவுக்கு ஏற்றுமதி. நிலத்தடி நீர் இங்கு பாதாளம் சென்று விட்டது. இந்த விடியலுக்கு வோட்டு போடும் இங்குள்ள விவசாயிகள்.. நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று பிறகு அதற்கு ஆழ் குழாய் கிணறு ....அதற்கு இலவச மின்சாரம் ...மின்சார கட்டணம் உயர்ந்தால் அதை இங்குள்ள சிறு தொழில் காரன் கட்டுவான் ...


sethu
ஜூலை 29, 2024 09:23

இப்படி ஒரு இனத்துரோகிக்கு ஒட்டு போட்டவனும் கள்ள ஒட்டு போட்ட துணைபோனவனும் நாசமாகப்போவான் அறநிலைத்துறை அமைச்சன் சேகர் பாபு அம்போன்னு போவான்.


sethu
ஜூலை 29, 2024 09:21

களவாணி பய கருணாநிதியை யம் மிஞ்சிய தமிழகதின் தமிழ் இனத்தின் துரோகி இந்த ஸ்டாலின் ஒரு நல்லது செய்யவில்லை .இருப்பதை அழிப்பதிலேயே தன முழு நேரத்தொழிலாக இந்த 4 வருடமாக தமிழகத்தை அழிக்கிறான் இவன் குடும்பம் விளங்காது அம்போன்னு போகும் .


Svs Yaadum oore
ஜூலை 29, 2024 09:16

காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆற்றின் இருபுற கரைகளில் ஆங்கிலேயர் காலத்தில் 40 அடி சாலைகள் இருந்துள்ளனவாம் . அவை இப்போது இல்லையாம் ...இதை சொல்வது தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் .....ஆனால் வோட்டு போடும் போது மட்டும் இந்த உழவர்கள் காசு பிரியாணிக்கு டாஸ்மாக் என்று விடியலுக்குத்தான் வோட்டு ....அப்பறம் இப்பொது புலம்பி என்ன பயன்?? ....நன்றாக அனுபவிக்க வேண்டியதுதான் ....


முக்கிய வீடியோ