உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏல விற்பனையில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

ஏல விற்பனையில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

அன்னுார்: ஏல விற்பனையில் பங்கேற்க, விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அழைப்பு விடுத்துள்ளது.அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாளை (5ம் தேதி) விளை பொருட்களின் ஏல விற்பனை நடைபெறுகிறது. காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, தேங்காய், தேங்காய் கொப்பரை, பருத்தி உள்ளிட்ட விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யலாம். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களைக் கொண்டு வந்து எந்த தரகு கட்டணமும் இல்லாமல், விற்கலாம். இதில், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.'விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைக்காவிட்டால், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கிடங்குகளில், விளை பொருட்களை இருப்பு வைத்து, பின்னர் நல்ல விலை வரும்போது விற்கலாம். இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ