தேசிய கைத்தறி பட்டு பருத்தி கண்காட்சி
கோவை : பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில், தேசிய கைத்தறி பட்டு மற்றும் பருத்தி கண்காட்சி நடந்து வருகிறது.தமிழக காஞ்சிபுரம் மட்டுமின்றி, கோல்கட்டா, மும்பை, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், காஷ்மீர், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நெசவாளர்கள், பழங்குடியினரின் தயாரிப்புகளை ஒரே இடத்தில் வாங்கலாம்.இக்கண்காட்சியில், ஹைதராபாத் நகை வடிவமைப்பாளர் அரங்கில், முத்து, பவளம், ரூபி, எமரால்டு, போன்ற கற்களை கொண்டு, வடிவமைக்கப்பட்ட நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டவல், பெட்சீட், போன்றவையும் இடம் பெற்றுள்ளன.