மேலும் செய்திகள்
செப்.23ல் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
04-Sep-2024
பொள்ளாச்சி:தபால்துறை சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவும், அவ்வப்போது, மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி கோட்ட அளவில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும், 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள், தங்கள் கருத்துகளையும், புகார்களையும், 14ம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்கலாம்.அதன்படி, 'சாந்தினிபேகம், தபால் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி 642001' என்ற முகவரிக்கு, தபால் வாயிலாக கருத்துக்கள் மற்றும் புகார்களை அனுப்பி வைக்கலாம். தபால் உறை மீது,'DAK ADALAT' என்று எழுதி அனுப்ப வேண்டுமென, தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுளளது.
04-Sep-2024