உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு வழிப்பாதைக்கு திட்டம் மக்களிடம் கருத்து வரவேற்பு

ஒரு வழிப்பாதைக்கு திட்டம் மக்களிடம் கருத்து வரவேற்பு

கோவை;கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக, 100 அடி ரோட்டில் இருந்து, சிவானந்தா காலனி செல்லும் வாகனங்கள், 100 அடி ரோடு, ஷீலா மருத்துவமனை சந்திப்பில் இருந்து, இடது புறமாக திரும்பி, கொங்குநாடு மருத்துவமனை, கிராஸ்கட் ரோடு, வடகோவை மேம்பாலத்தின் வலது புறமாக சர்வீஸ் ரோட்டில் பவர்ஹவுஸ் சென்றடைந்து, சிவானந்தா காலனி மற்றும் 100 அடி ரோடு அடையலாம்.இந்த ரோட்டை ஒருவழி பாதையாக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக பொது மக்கள் வரும், 31ம் தேதி வரை, 0422 2212567, gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி மூலமும், கருத்துக்கள் தெரிவிக்கலாம் என, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ