உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அன்னுார்; திம்மநாயக்கன்புதுார், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. அன்னுார் திம்மநாயக்கன்புதுாரில், மகா பைரவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது.இங்கே பைரவருக்கு என தனி கோவில் உள்ளதால், பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று முன்தினம் இரவு கோவிலில் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.இதையடுத்து, பைரவருக்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை