உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையை கடக்க முயன்ற நீதிபதி, டூவீலர் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற நீதிபதி, டூவீலர் மோதி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி : சாலையை கடக்க முயன்ற மாவட்ட நீதிபதி, இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி, 58. இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சொந்த வேலை காரணமாக அவரது வீட்டில் இருந்து காரில் வந்த நீதிபதி உடுமலை ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கி ரோட்டை கடக்க முயன்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7fkpw3nw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, பொள்ளாச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நீதிபதி மீது மோதினார். நிலை தடுமாறி கீழே விழுந்த நீதிபதி கருணாநிதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொள்ளாச்சி கிழக்கு போலீசார் இறந்த நீதிபதி கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழ்வேள்
ஜூலை 17, 2024 10:03

ராணுவம்/ துணை ராணுவம் போலீஸ் உளவுத்துறை ஆம்புலன்ஸ் தீயணைப்பு பேரிடர் மேலாண்மை மரண வாக்குமூலம் பெறும் நீதிபதிகள் தவிர மற்ற எல்லா வகையான வாகனங்களுக்கும் உச்ச பட்ச வேகம் 65 கிமீ க்கு மேற்படாமல் தயாரிப்பு நிலையிலேயே வேகம் லாக் செய்யும் சட்டம் தேவை..திரிசமன் வேலை செய்யும் மெக்கானிக்குகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை அவசியம்... இல்லை என்றால் விபத்துகள் குறையாது.. வாகனங்கள் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் லைசென்ஸ் தடை பறிமுதல் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்


S.V.Srinivasan
ஜூலை 17, 2024 11:33

இதெல்லாம் இந்தியாவுல குறிப்பா தமிழ் நாட்டுல நடக்கற காரியம் இல்லேங்க. வாகன ஓட்டிகளுக்கு முதல் தேவை சுய கட்டுப்பாடு. அது நம்ம ஆளுங்களுக்கு அறவே கிடையாது.


Kalyanaraman
ஜூலை 17, 2024 00:25

இது எதேர்ச்சியாக நடந்த விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? ஏனெனில் பாதிக்கப்பட்டது நீதிபதி.


Jysenn
ஜூலை 16, 2024 23:34

Despite the name that he has I feel sad for the life lost. Some two wheeler riders have taken the role of Lord Yama. There is no harm if such two wheeler riders are done to death on the spot by the crowd. Accident-causing vehicle riders must be encountered to death.


Kassalioppilan
ஜூலை 16, 2024 22:43

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்


THINAKAREN KARAMANI
ஜூலை 16, 2024 22:16

இருசக்கர வாகனத்தை ஒரு கையில் செல்பேசி வைத்துப் பேசிக்கொண்டு அலட்சியமாக ஓட்டுபவர் பலபேர் இருக்கிறார்கள். வண்டி ஓட்டும்போது மிகவும் கவனமாக ஓட்டவேண்டும். சாலைவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பரிதாபமான விபத்துக்கள் நடக்காமல் இருக்கும். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 21:42

பாவத்தின் சம்பளம் மரணம் .......


chandrakumar
ஜூலை 16, 2024 21:03

திராவிட மாடலா இல்லை இண்டியன் சிஸ்டமா தெரியவில்லை இங்கே நீதிபதியாக இருந்தாலும் இதுதான் கதி. உயிர் இழந்த நீதிபதிக்கு ஆழ்ந்த இருங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...


S Sivakumar
ஜூலை 16, 2024 19:47

ஆழ்ந்த அனுதாபங்கள். கொடிய மரணம்.


Ram pollachi
ஜூலை 16, 2024 19:07

மரப் பேட்டை முதல் ஊஞ்சவேலம்பட்டி வரை தினமும் திக் திக் பயணம் தான்... இரவில் தெரு விளக்கு இருக்காது அதே ஏரியா வாசிகளுக்கு சாலை அத்துப்படி. கடைவீதி முதல் ரங்கசமுத்திரம் வரையான பயணம் இதைவிட கொடுமையாக இருக்கும். ஜனங்கள் எங்கே இருந்து வந்தார்களோ தெரியவில்லை.


J.Isaac
ஜூலை 16, 2024 18:53

அனைத்து கல்வியை விட நம் நாட்டில் மிக முக்கியமாக அனைவருக்கும் இன்றைய தேவை, ஒழுக்க கல்வி. அறிவு கல்வி அதிகமாகிவிட்டது. ஆனால் ஒழுக்கம் சீரழிந்துகொண்டிருக்கிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை