உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரில் வந்த வாலிபர் தலை துண்டித்து பலி

காரில் வந்த வாலிபர் தலை துண்டித்து பலி

அவிநாசி; அவிநாசி அருகே டேங்கர் லாரி பின்புறம் கார் மோதியதில், காரில் வந்த வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பலியானார்.கோவை, மசக்காளிபாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன் மகன் அபிமன் சூர்யா, 26; பெங்களூரில் பணிபுரிகிறார்.நேற்று மாலை கோவையில் இருந்து அவிநாசிக்கு காரில் புறப்பட்டார். சேலம் - கொச்சி பைபாஸ் சாலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள தெக்கலுார், வடுகபாளையம் பிரிவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரியின் பின்புறம் மோதி, உருக்குலைந்தது. காரின் முன்புற இரும்பு தகடுகள் சிதைந்து வெட்டியதில், அபிமன் சூர்யா தலை துண்டிக்கப்பட்டு அதே இடத்தில் பலியானார்.அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை