ஆடி மாத பிரதோஷம்; கோவில்களில் வழிபாடு
----- நிருபர் குழு -வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, ஆடி மாத பிரதோஷபூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதன்பின், ரிஷப வாகனத்தில் சிவபெருமான், தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவில்களில் நேற்று மாலை, 6:00 மணிக்கு பிரதோஷ பூஜையில், சிவபெருமானுக்கு, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்கம் சுவாமி அமைந்துள்ளது. பிரதோஷத்தன்று மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, மலைமேலுள்ள பஞ்சலிங்க சுவாமிகளுக்கு, பல்வேறு திரவியங்களில் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. அதே போல், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, சிவபெருமான் மற்றும் நந்திக்கு மகா அபிேஷகம் நடந்தது.