சிறந்த மாணவனை உருவாக்கும் அத்யாயன இன்டர்நேஷனல் பள்ளி
வ டவள்ளி - தொண்டாமுத்துார் ரோடு, லட்சுமி நகரில் செயல்பட்டு வருகிறது, அத்யாயன இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி. பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: பல துறைகளில் சிறந்து விளங்கும் மாணவனை உருவாக்கும் நோக்கத்துடன் கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் ரோட்டில் துவக்கப்பட்டதுதான் எங்கள் அத்யாயன இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் இந்தியா மற்றும் உலகத்தரத்திற்கேற்ற வகுப்பறை கற்றல் முறைகளை வழங்குகிறோம். பள்ளியில் பசுமையான மைதானங்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கிறோம். கல்வி, விளையாட்டுக்கு அப்பாற்பட்டு, கலை, இசை, நடனம், நாடகம் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள், திறன் மேம்பாட்டு பட்டறைகள் நடத்துகிறோம். இதனால், ஒவ்வொரு மாணவரும் தன்னம்பிக்கையுடன், சுய அடையாளத்துடன் சமுதாயத்தில் முன்னேற கற்றுக்கொள்கின்றனர். மேலும், ஸ்மார்ட் கிளாஸ், அறிவியல் ஆய்வகம், உள்ளிட்ட வசதியும் இங்குள்ளது. தற்போது 2025 - 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தொடர்புக்கு, 99421 21000, 94864 21000 www.taips.edu.inமற்றும் taips.edu.inஇவ்வாறு, அவர் கூறினார்.