உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 75,000 சதுரடியாக மாறுகிறது விமான நிலையம்; நான்கு மடங்கு! விரிவாக்கத்துக்குப்பின் கையாளும் திறன் பெருகும்

75,000 சதுரடியாக மாறுகிறது விமான நிலையம்; நான்கு மடங்கு! விரிவாக்கத்துக்குப்பின் கையாளும் திறன் பெருகும்

கோவை; ''நில அளவை பணி முடிந்ததும் விமான நிலைய விரிவாக்கப் பணி விரைவில் துவங்கும். தற்போது 18 ஆயிரம் சதுரடியுடன் உள்ள விமான நிலையம், 75 ஆயிரம் சதுரடியாக மாறும். விமான நிலையத்தின் கையாளும் திறன், நான்கு மடங்கு அதிகரிக்கும்,'' என, கோவை விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) சம்பத்குமார் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஒதுக்கிய, 605 ஏக்கர் நிலத்தில் அளவை பணிகள் ஜனவரி முதல் நடந்து வருகின்றன. தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இப்பணிகள், இம்மாத இறுதியில் நிறைவடையும். நிலப்பரப்பில் சிறியளவில் சிக்கல் இருந்தாலும், அவை விரைவில் தீர்க்கப்படும். நில அளவை முடிந்ததும், முதல்கட்ட பணியாக, எல்லைப் பகுதிகளை வடிவமைத்து, தடுப்பு சுவர்கள் எழுப்பப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள ஓடுதளம், 2,900 மீட்டர் கொண்டது. விரிவாக்கத்தில் மேலும் 3,800 மீட்டர் இணைக்கப்படும். புதிய ஓடுதளத்துக்காக, 93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் விரிவாக்கத்துக்கு பின், தற்போதுள்ள 18 ஆயிரம் சதுரடியில் இருந்து, 75 ஆயிரம் சதுரடியாகும். இதன் கையாளும் திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். முகப்பு பகுதியும் மாற்றம் பெறும். கோவை விமான நிலையத்துக்கு தற்போது, 27 விமானங்கள் வந்து செல்கின்றன. நாள்தோறும் சராசரியாக 3,000 பயணிகள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

விமான நிலையத்தை பார்வையிட அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

விமான பயணிகளின் சேவை நாள், நேற்று கொண்டாடப்பட்டது. பயணிகளுக்கு கனிவான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மரக்கன்று நடுதல், செல்பி பாயின்ட், ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் போன்றவை நடக்கும். அரசு பள்ளியை சேர்ந்த, 15 மாணவர்கள் விமான நிலையத்தை பார்வையிட்டு, அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Guru Rajan
செப் 17, 2025 18:25

மிகவும் புறக்கணிக்கபட்ட கோவை விமானநிலைய விரிவாக்கம்.திருச்சி மதுரை விமான நிலையங்களில் வளர்ச்சி 5% கூட இல்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தெரிகிறது. கூட்டம் நிரம்பி வழிகின்றன.கடுப்பாக இருக்கு.


Raj
செப் 17, 2025 17:54

வாயில் வடை சுடுவது மிக சுலபம். “எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய். ......” என்ற பாடல் தான் நினைவில்....


கோபாலன்
செப் 17, 2025 05:12

மிக மோசமான திட்டம்.இதை உடனடியாக கைவிட வேண்டும்.விமான நிலையத்தின் அருகாமையில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளன.இவை தவிர பல கல்லூரிகள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், தொழில் கூடங்கள் உள்ளன.இந்நிலையில் விரிவாக்கம் உகந்ததாக இல்லை.பெரிய விமானங்களை இயக்குவதற்கு உகந்த இடம் இல்லை.இவை மிக அதிக ஓசை எழுப்பும்.அதிர்வுகளை உண்டாக்கும்.ஆகவே நகரின் எல்லையில் இருந்து சுமார் 15/20 கி.மீ. தொலைவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும்.இது கொங்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கான அடுத்த 40/50 வருடங்களுக்கு ஆன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்க பட வேண்டும்


Guru Rajan
செப் 17, 2025 18:28

ஏற்கனவே ஒரு முன்னேற்றமும் இல்லை. வாயில வட சுடறானுங்க.


முக்கிய வீடியோ